0 0
Read Time:1 Minute, 54 Second

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரத்தில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.

வட்டம் வள்ளாலகரத்தில் சார்நிலை கருவூல மயிலாடுதுறை வட்டம் வள்ளாலகரத்தில் கருவூல் அலுவலக கட்டிடமானது தரை தளம், முதல் தளம் என 1535 சதுர அடி பரப்பளவில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சார்நிலை கருவூல அலுவலக கட்டிடமானது திங்கள் கிழமை சென்னையிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.

இந்நிகழச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் சந்தானகிருஷ்ணன்,
பொதுப்பணித்துறை (கட்டிட பராமரிப்பு)செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி கருவூல அலுவலர் பூமிநாதன், பொதுப்பணித்துறை (கட்டிட பராமரிப்பு)உதவி பொறியாளர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %