1 0
Read Time:2 Minute, 19 Second

மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை சோழம் பேட்டை குத்தாலம் வழியாக ஆடுதுறை வரை புதிய நகரப்பேருந்து இயக்கப் பட்டது இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படவேண்டும் என பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக விளங்கி வந்தது இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரிடம் பேருந்து இயக்கப்பட வேண்டும் என மனு அளித்தனர்.

உடனடியாக கோரிக்கையின் தன்மை புரிந்து சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நகர பேருந்து மக்கள் பயன்பாட்டுக்காக இயக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து இன்று புதிய பேருந்து இயக்கப்பட்டது இந்த பேருந்தினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஓட்டுநராக இயக்கி மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை அண்ணா சிலை சோழம்பேட்டை வானாதி ராஜபுரம் திருவேள்விக்குடி அஞ்சளாறு வழியாக குத்தாலம் வரை இயக்கினார்.

இதனால் ஓட்டுனராக பணிபுரிந்து எம்எல்ஏவின் சேவையை பார்த்து மனம் மகிழ்ந்து பெரும் திரளான மக்கள் வழி நெடுகிலும் கூடி மாலை சால்வை அணிவித்து ஆராத்தி எடுத்து மரியாதை செய்தனர் தங்கள் பகுதியில் நகரப்பேருந்து பல ஆண்டுகளாக இயங்கபடமல் இருந்தது சட்டமன்ற உறுப்பினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றி அவர்களே முதல் பேருந்தின் பயணத்தை ஓட்டுநராக செயல்பட்டதனை பார்த்த மயிலாடுதுறை சுற்றுவட்டார மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %