0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக எம்பி., ரமேஷ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, கடந்த 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் சரணடைந்தார். பின்னர், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து எம்.பி., ரமேஷ், கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி பிரபாகரன் அவருக்கு நவம்பர் 9 ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %