0 0
Read Time:6 Minute, 46 Second

பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும். இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

இளநீரில் எலக்ரோலைட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக பராமரித்து, அதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

கார்போனேட்டட் பானங்களை தேடி வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இளநீரை வாங்கிக் குடித்தால், உடலின் ஆற்றல் ஊக்குவிக்கப்படுவதோடு, உடனடி எனர்ஜியையும் பெறலாம். மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், நாள் முழுவதும் வேண்டிய ஆற்றலை இது வழங்கும்.

இளநீரில் கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

இளநீரில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அமிகம் உள்ளதால், இது மிகவும் சக்தி வாய்ந்த டையூரிக் ஏஜென்ட்டாக செயல்பட்டு, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். அதுமட்டுமின்றி, இளநீரை தினமும் குடித்து வந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கர்ப்பிணிகள் இளநீரை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் இளநீர் தாகத்தை தணிப்பதோடு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதனால் நோய்களின் தாக்கம் குறையும்.

இளநீரை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இயற்கையான என்சைம்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது

இளநீரை குடிப்பதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

காலை நேரம் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பானமாகும். உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது தீவிர உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பை சமன் செய்கிறது. இளநீர் குடிப்பது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும்.

உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது, உங்கள் உணவை முழுமையாக்குகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது.

உணவுக்கு பின் இதனைக் குடிப்பது வயிற்றில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதய துடிப்பை குறைக்க உதவுகிறது. தூங்க செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மனஅழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது.

தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும். இது உங்களை நோய்த்தொற்றில் இருந்தும், சிறுநீரக பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %