0 0
Read Time:2 Minute, 13 Second

கடலூர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் கவுதம்ராஜா. இவருக்கு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் அடுத்த பாலுத்தாங்கரையை சேர்ந்த புனிதவள்ளி(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது புனிதவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று புனிதவள்ளி வீட்டின் பின்னால் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள வயலில் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், புனிதவள்ளியை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புனிதவள்ளியும், அவரது வயிற்றில் உள்ள குழந்தையும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, புனிதவள்ளியின் தாயார் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் புனிதவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %