0 0
Read Time:1 Minute, 18 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரிந்து பாதி வழியில் வீடு திரும்பினர்.

அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில் முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தால் பேருந்தில் காலையிலேயே கிளம்பி பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சிரமத்தைக் தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மழை காலங்களில் விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %