0 0
Read Time:1 Minute, 41 Second

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வணிக வரித்துறையில் ஏற்கனவே 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன..வணிக வரித்துறையை மறு கட்டமைப்பு செய்யும் விதமாக திருவள்ளூர்,  செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஒசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய 7 இடங்களில் வணிக வரி நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 7 நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வணிகவரி செலுத்துபவர்கள் அக்கோட்டங்களில் வணிகவரி செலுத்த ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

அதேப்போல் 9 நுண்ணறிவு கோட்டங்கள் இயங்கி வருவதாகவும், புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்கவும் தணிக்கைகளை அதிகப்படுத்தடும் செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஒசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %