0 0
Read Time:1 Minute, 59 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய மடப்புரம் ஊராட்சியில் தன்னிறைவை திட்டம் 2020 -21 கீழ் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் அமைத்திருந்த கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில், மடப்புரம் ஊராட்சி நிர்வாக சபை தலைவர்கள் முகம்மது ஷிஹாபுதீன், இக்ராம்ரசூல், முகமது இலியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, ஆர்.திருமலை கண்ணன், ஒன்றிய பொறியாளர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மெகராஜ்நிஷா செல்வநாயகம், சந்திரமோகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜ் கண்ணன், சாந்தி வேல்முருகன், ஒப்பந்ததாரர் வனிதா ராஜ் கண்ணன் மற்றும் ஆக்கூர், மடப்புரம் ஊர் ஜமாத்தார்கள், கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %