0 0
Read Time:1 Minute, 29 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா!

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 01/11/2021 காலை 9.15 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி முதல் நாளில் 1000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜீ. மாலா வரவேற்புரையாற்றினார்.மன்றத்தின் தலைவர் டாக்டர் எம்.சிவக்குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்புரை நிகழ்த்தினர். இவ்விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டி.குமார் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு வாழத்து தெரிவித்து வரவேற்றனர். உதவி தலைமையாசிரியர் திரு.டி.ஆனந்தன் அவர்கள் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %