0 0
Read Time:1 Minute, 36 Second

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. திங்கட்கிழமை இரவு தலைவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கார்கூடல் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

நள்ளிரவில் நிகழ்ந்த விபத்தில் வாகனத்தில் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியாத நிலையில், இரண்டு நாட்கள் ஆகியும் அந்தக் கார் அதே இடத்திலேயே கிடக்கிறது. இன்று சிதம்பரத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற மஹிந்திரா டியூவி கார் ஒன்றும் அதே இடத்திலேயே விபத்துக்குள்ளாகி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

காரில் வந்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். தொடர் மழை காரணமாக சாலை ஈரமாக உள்ள நிலையில், அதிவேகமாக வரும் கார்கள் கட்டுப்பாட்டை இழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %