0 0
Read Time:1 Minute, 37 Second

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில்- மயிலாடுதுறை சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி 2 அரசு பஸ்கள் வந்து கொண்டிருந்தன. இந்த பஸ்களின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் 2 பஸ்களின் முன்புறம் உள்ள கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் கணேஷ் (வயது21), சீர்காழி இரணியன் நகரை சேர்ந்த முருகேசன் மகன் பிரேம்குமார் (26), வைத்தீஸ்வரன்கோவில் வேலவன் நகரை சேர்ந்த செல்வகுமார் மகன் சரத்குமார் (21) ஆகிய 3 பேரும் பஸ்களின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் கைது செய்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %