0 0
Read Time:2 Minute, 2 Second

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஒப்புதலுடன் மாநில துணைத் தலைவர் கே. ஐ. மணிரத்தினம், மாநில பொதுச் செயலாளர் பி.சேரன், முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பிபிகே .சித்தார்த்தன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தெற்கு கீழ்கண்ட புதிய நிர்வாகிகளை கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் என். வி. செந்தில்நாதன் அவர்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

புதிய நிர்வாகிகள் விபரம்
கடலூர் மாவட்ட மூத்த துணை தலைவர்களாக தில்லை ஆர்.மகிகீன், ஜெமினி எம்.என். ராதா மாவட்டத் துணை தலைவராக ராஜா சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ஆர் சம்பந்தமூர்த்தி ஆர்.வி சின்ராஜ் என்கின்ற ஜெயக்குமார் என். இளங்கோவன்
மாவட்ட செயலாளர்களாக திருமதி கு.தில்லைசெல்வி ஆட்டோ டி.குமார் எஸ்.எஸ்.நடராஜன் ஆகியோர் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

புதிய நிர்வாகிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %