0 0
Read Time:1 Minute, 21 Second

பிரபல நடிகர் மயிலாடுதுறைக்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது..

அண்மையில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த நிர்வாகி ஒருவரது பெயரை வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை எஸ்.பி சுகுணாசிங்கிடம், ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சித்தமல்லி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபல நடிகரது படத்தை திரையிட அனுமதியோம் என்றார்.

தொடர்ந்து வேல் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கிற்கு வந்த அக்கட்சியினர், திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த திரைப்படம் நிறுத்தப்பட்டதாக, சொல்லப்படுகிறது.

source:polimer

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %