0 0
Read Time:1 Minute, 20 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முருகமணி முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணியம் மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் மாவட்ட மாணவரணி தலைவர் வீர மூர்த்தி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் கருப்பன் விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழி தேவன் கலந்துகொண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் லெனின் நகர அவைத்தலைவர் தங்க மகாலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %