0 0
Read Time:1 Minute, 34 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி பகுதியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் தரங்கம்பாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் 175 குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, பாய், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பின்ன தரங்கம்பாடி கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் பயிர் சேதம் பாதிப்புகளை பார்வையிட சென்றனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %