0 0
Read Time:2 Minute, 18 Second

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.

நாகை மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த பா.கொந்தை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம்மாள். 80 வயதுடைய மாணிக்கம்மாளுக்கும், 90 வயதுடைய அவரது கணவர் சிங்காரவேலுவுக்கும்தான் அந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

வயதான கணவரோடு தள்ளாடியபடியே நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் வயதான பாட்டி மாணிக்கம்மாள். அந்தப் புகார் மனு குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, “தள்ளாடுற வயதில் நடக்கவே முடியாத என்னோட கணவருடன் கஷ்டப்பட்டுவருகிறேன். படுக்கையிலயே தன்னால நீர் கழிச்சிடுறாரு. எனக்கு நாலு பிள்ளைங்க. மூத்தவனும், இளையவனும் எங்களுக்கு உதவாட்டியும், தொந்தரவு செய்யுறது இல்ல. ஆனா இரண்டாவது மகனும், மூனாவது மகனும் பொண்டி, பிள்ளைங்க பேச்சக் கேட்டுக்கிட்டு அடிக்கிறானுங்க. 

நாலு பிள்ளைங்கள பெத்தோம், சாகப்போற காலத்துல கால் வயிற்று கஞ்சி ஊத்தாட்டியும் பரவாயில்ல. இருக்குறவரைக்கும் அவங்க எப்படியாவது வாழ்ந்துட்டு போகட்டும்னுகூட விடமாட்டேங்குறாங்க. இருக்க இடமில்லாமல் சாகப்போற காலத்துல தவிக்கிறோம். வயதான எங்களின் நிலமை அறிந்து பாதுகாப்பு தர வேண்டும்” என கண் கலங்குகிறார் மாணிக்கம்மாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %