0 0
Read Time:6 Minute, 56 Second

வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை.

இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது. இதன் வரிசையில் வாழைப்பூவின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்து – நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.

சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து உடல் பருமனால் அவதிப்படுவோர் வாழைத்தண்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வபோது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. சிறுநீரக கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு முதன்மையாக செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வாழைத்தண்டு வைட்டமின் பி 6 என்னும் உயர்ந்த சத்தை தன்னுள் கொண்டுள்ளது. இது உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும். வாழைத்தண்டு பொட்டாசியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு மற்றூம் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிசை அளிக்க உதவும்.

வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் உடலில் அதிக இரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்கலாம். குறைந்தது உடலுக்கு ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளின் அபாயத்தை குறைக்க செய்யும்.

வாழைத்தண்டுகளின் சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

உடலை சுத்தம் செய்வதோடு முக்கியமாக குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இது நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது. செரிமானம் மேம்படுகிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.

உடலில் கொழுப்பு செல்கள் விரிவடைவதை கட்டுபடுத்தவும் செய்கிறது. சிறுவயதில் இருந்தே வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம். குறிப்பாக நீரிழிவு அபாயத்தை கொண்டிருப்பவர்கள் வாழைத்தண்டை சேர்ப்பதன் மூலம் நீரிழிவு அபாயத்திலிருந்து விடுபட முடியும்.

இதில் சர்க்கரை இல்லை என்பதால் இதன் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது நீரிழிவு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

உண்மையில் எடை இழப்புக்கு என்று இதை சொல்வதை காட்டிலு தொடர்ந்து எடுத்துவந்தால் எடை அதிகரிப்பு பிரச்சனையே உண்டாகாது. வாழைத்தண்டு அதிக நார்ச்சத்து உள்ளடக்கத்தை கொண்டுள்ள உணவு. இதை எடுத்துகொள்வதன் மூலம் சிறந்த எடை இழப்பு சாத்தியமாகிறது. நார்ச்சத்து உடலின் உயிரணுக்களில் சேகரிக்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் அளவை குறைக்க செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %