0 0
Read Time:1 Minute, 55 Second

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் பாலு. (வயது 65) விவசாய கூலித் தொழிலாளியான இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 4-வது மகன் காளிமுத்து (21) என்பவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். காளிமுத்து கடந்த 16-ந்தேதி பொறையாறு வந்துள்ளார். பாலு தினமும் மது அருந்திவிட்டு வந்து தெரு மக்களிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் பாலு மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று  காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் பாலு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல்அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பான கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பாலுவின் மகன் காளிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %