1 0
Read Time:3 Minute, 24 Second

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் கொடி பவனியை வழிநடத்தினார்.

தரங்கம்பாடி பங்குத்தந்தை அருட்திரு.செல்வராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன” என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.

இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழியந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட்திரு.தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %