0 0
Read Time:1 Minute, 12 Second

மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

கொள்ளிடம்: கொள்ளிடம், புத்தூர், அரசூர்,எருக்கூர்,மாதானம், ஆச்சாள்புரம்,புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் பகுதியில் பிரம்பு மற்றும் கோரைபாய் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 14 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் சம்பா நடவு பயிர் சாகுபடி செய்யும் இலக்கை வைத்து தீவிர பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தொடர் மழையால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %