0 0
Read Time:2 Minute, 10 Second

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர் அக்னிவீரன் (வயது 52). மீனவர். கடந்த 24.7.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி சக சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த அக்னிவீரன், அந்த சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இருப்பினும் இது பற்றி அறிந்த சிறுமியின் தாய் இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்னி வீரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் அக்னிவீரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை நல வாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெற்று வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %