0 0
Read Time:5 Minute, 51 Second

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய வகை கொரோனா பரிசோதனை கட்டாயம் சுகாதாரதுரை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரான் புதிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி கண்டறியப் பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒமிக்ரான் வைரஸ் 14 நாடுகளில் வேகமாக பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய அரசு அறிவித்தது. பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் மாநிலங்களை வலியுறுத்தியது. இந்நிலையில் இந்தியாவில், 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக விமானநிலையங்களிலும் அப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு 12 இல் இருந்து 14 வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. மிகவும் முக்கியமாக சிங்கப்பூரில் இருந்து வரக்கூடிய விமானத்தை பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வகை வைரஸ் (ஒமிக்ரான்) பரிசோதனை (rtpcr) செய்யப்படுவது கட்டாயம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று சிங்கப்பூரிலிருந்த விமானங்கள் (ஏர்இந்தியா 114 பயணிகள், இண்டிகோ 168 பயணிகள்) என மொத்தம் 282 பயணிகள் பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பரிசோதனை முடிவுகள் 4 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால் திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. மேலும் கூட்டமும் அதிகரித்து ஒரே சமயத்தில் ஏராளமானோர் கூடி வருகின்றனர்.ஆகவே சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்க்கு வரும் பயணிகளை வரவேற்க வருபவர்கள் நான்கு மணி நேரம் தாமதமாக வர வேண்டும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %