0 0
Read Time:59 Second

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

திருச்சி செல்லும் அரசு பேருந்தும், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தும் திட்டக்குடி பேருந்து நிலையம் வந்தடைந்த நிலையில், எந்த பேருந்தை முதலில் இயக்குவது என்பது குறித்து இரு ஓட்டுநர்களுக்குமிடையே  முரண்பாடு எழுந்துள்ளது.வாக்குவாதம் முற்றியநிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். சம்பவம் குறித்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %