திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூர் கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்த தானம் முகாம் ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி என் ரவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகப்பா ஆகியோர் உடன் இருந்தனர். மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கல்லூரி பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.