0 0
Read Time:2 Minute, 16 Second

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். கடலோர காவல் குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் அம்மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே கடற்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் கடலில் குளித்துள்ளனர். இங்கு அலைகளின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கடலில் குளிப்பது ஆபத்து என போலிசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ள நிலையில், அதனை மீறி மாணவர்கள் சக நண்பர்களுடன் குளித்துள்ளனர்.

அப்போது வந்த அலையில் சிக்கி, இரண்டு மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மயிலாடுதுறை தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மேலையூரை சேர்ந்த சிவசக்தி (வயது 18) என்ற மாணவர். மற்றொருவர், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவர்.

மாணவர்கள் அடுத்துச்செல்லப்பட்டதையடுத்து, எஞ்சிய இருந்த பிற மாணவர்கள் தங்களது நண்பர்களை காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். கூச்சலை கேட்டு அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் மாயமான மாணவர்களை தேடத் தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் குழும போலீசார் தரங்கம்பாடி மீனவர்களுடன் இணைந்து படகுகள் மூலம் மாயமான இரு மாணவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %