0 0
Read Time:1 Minute, 23 Second

மயிலாடுதுறை மாவட்டம் சின்ன கடை தெருவில் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அப்துல் சாதிக் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக ஜாபர் அலி ஹசனி வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாக சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசானது விடுதலை செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாசர், தைக்கால் முபாரக், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகி அபூபக்கர், நவாஸ் கான் ஆகியோர் தலைமை உரையாற்றினார். ஆண்கள் மற்றும் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %