0 0
Read Time:1 Minute, 47 Second

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டும் நினைவுநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைமைக் கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட கழக அமைப்புகளிலும் ஜெயலலிதா நினைவு நாளை கடைப்பிடிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %