0 0
Read Time:1 Minute, 36 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்விற்கு நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமூர்த்தி , இணை செயலாளர் செஞ்சிலட்சுமி இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் எம்.ஜீ.ஆர் மற்றும் அண்ணா திருவூருவச்சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதாவின் திருவூருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணன், சுகந்தி ஆசைத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயராஜ்,10 வது வார்டு செயலாளர் இளவரசன், பேச்சாளர் வேலு, தியாகராஜன், மனோகர், பாலகிருஷ்ணன், சந்திரன், இசைபாலா, சக்திதாசன், சதீஷ் உள்ளிட்ட கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %