0 0
Read Time:2 Minute, 12 Second

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன். தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன். பேரா.முனைவர் ய.மணிகண்டனுக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று அறிவித்தார்.

அவ்வறிவிப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சர், இன்று (10.12.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன் மற்றும் பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன் ரா.அ.பத்மநாபன். தொ.மு.சி.ரகுநாதன். இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %