0 0
Read Time:1 Minute, 8 Second

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்கு சென்றபோது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கம் அருகே நடைபெற்றது. இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %