0 0
Read Time:1 Minute, 53 Second

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.

இளைஞர்களின் எழுச்சிமிகு தமிழ்நாடு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட,திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக, தரங்கம்பாடி பேரூராட்சியில், மழையினால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொறையார் -ராஜாம்பாள் தெரு,
பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

அவருடன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய குழ துணைத்தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %