0 0
Read Time:2 Minute, 12 Second


சிதம்பரம் அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிளியாளம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி திருப் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது, மேலும் கோவில் வளாகத்தில் உள்ள அய்யனார், மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது
கிராமங்களில் இருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ. பாண்டியன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் ,அகத்தியன் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம், மற்றும் தச்சை காடு ஊராட்சி தலைவர் ராம் மகேஷ், ராமர், அருள் முருகன், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அருள் ,மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம், கூட்டு சங்கத் தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த், ஒன்றிய செயலாளர் ராஜாங்கம் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி,வீராசாமி, உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %