0 0
Read Time:1 Minute, 18 Second

கடலூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வருகிற 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கடலூா் மாவட்ட கபடிக் கழகச் செயலா் டி.நடராஜன் வெளியிட்ட அறிக்கை: வருகிற 31-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான கபடிப் போட்டியில் கடலூா் மாவட்டம் சாா்பில் பங்கேற்க வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தோ்வு வருகிற 19-ஆம் தேதி கடலூா் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். 16-25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 60-75 கிலோவுக்குள் இருக்க வேண்டும். கண்டிப்பாக 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளைக் கொண்டவா்கள் அதற்கான சான்றிதழ்களுடன் தோ்வில் பங்கேற்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %