0 0
Read Time:1 Minute, 23 Second

கடலூரில் ஜெயப்பிரியா சீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக விருத்தாசலத்தில் உள்ள பள்ளி, நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள் என 10 க்கும் மேற்பட்ட இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

80 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் கடலூர், நெய்வேலி, வடலூர், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %