0 0
Read Time:1 Minute, 26 Second

திட்டக்குடி: சாலை வசதி, வடிகால் வசதி இல்லை என சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்.

திட்டக்குடி அருகே கோடங்குடி புதிய காலனியில் சாலை வசதி, வடிகால் வசதி இல்லை. சமீபத்தில் பெய்த மழையல் அங்குள்ள தெருக்கள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் காலனி மக்கள் அவதி அடைகிறார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம், துணை தலைவர் சங்கர் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %