0 0
Read Time:1 Minute, 5 Second

சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில்; இன்று(20.12.2021) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1482 பயனாளிகளுக்கு ரூ.3.60 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி இ.ஆ.ப. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: மகேஸ்வரன், விருதுநகர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %