0 0
Read Time:1 Minute, 31 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை வழங்கினார்.

உடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆணையர் முனைவர்.மா.மதிவாணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம். ஜெயங்கொண்டான் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) திரு.நரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %