0 0
Read Time:2 Minute, 9 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள், சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார், சந்திரபாடி காட்டுச் சேரி திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் பொதுவிநியோக அங்காடி கட்டிடம், சமத்துவபுர சமுதாய கழிப்பறை, பாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைக் கட்டிடம், திருக்களாச்சேரி ஆயப்பாடி இணைப்பு சிமெண்ட் சாலை புதிதாக சாலையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிகளில், செம்பனார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி,
நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %