0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

தலைமை கழக பேச்சாளர் முருகமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி ,மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் புவனகிரி புதிய பாலம் அருகாமையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் அண்ணா சிலை பெரியார் சிலை ஆகியவற்றுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %