0 0
Read Time:2 Minute, 0 Second

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வேளாண் உதவி அலுவலர் பலியானார். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாண் உதவி அலுவலர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள குமாரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). இவர், கொள்ளிடத்தில் வேளாண்மை உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட கண்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி போலீசார், விபத்தில் பலியான கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரி்க்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணிடம் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த குமார் மனைவி ரம்யா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %