0 0
Read Time:1 Minute, 47 Second

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் திங்கட்கிழமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு அலுவலர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்ததைப் போன்று இரண்டாவது நாளாக இன்று தனது வீட்டிலிருந்து நடந்து சென்று பேருந்து நிறுத்தம் சென்றார் அங்கிருந்து மகளிருக்கான விலையில்லா பேருந்து பயண திட்டத்தில் பொதுப் பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்திற்கு பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து சென்றார். அவருடன் அரசு அதிகாரிகள் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %