0 0
Read Time:2 Minute, 22 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாள் விழா குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தஅனைவரையும் மாநிலமருத்துவரணி மண்டல செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல்அவர்கள் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சி அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் எம் ஜி ராஜராஜன் அவர்கள் தலைமையில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு பேனா முக கவசம் புத்தாண்டு காலண்டர்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

நகர தலைவர் K.ரஜினிகாந்த மாவட்டதுணைத் தலைவர்கள் கே நாகராஜன் எஸ் கே வைத்தி மாவட்ட பொதுச் செயலாளர்கள் தில்லை v. குணா குமார் இன்பரசு டாக்டர் பாரி மாவட்ட தொண்டரணிகோ குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் எஸ் புரட்சிமணி மாவட்ட மூத்ததுணைத்தலைவர் பி கே காந்தி மாநில பொதுச் செயலாளர் எஸ் வேல்முருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நோட் பேனா முக கவசம் மற்றும் காலண்டர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் துரைமுருகன் இளைஞர் அணி நகர தலைவர் துரை சிங்காரவேலு ஜிஎஸ்டி நகர தலைவர் மாயவன் மகளிரணி மாலா சரவணன் பழனிவேல் லோகேஷ் வித்யாசாகர் ரஞ்சித் பிரகாஷ் குரு ஆசிரியர் பக்தவச்சலம் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழா சிறப்பாகநடைபெற்றது விழா முடிவில் அமைப்புசாரா தொழிலாளர் அணியானரவி நன்றி கூறினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %