0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உள்ளனர். 50-க்கும் மேற்ப்பட்ட காப்பாளர் மற்றும் பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது மகளுடன் நேரில் சென்று இல்லத்தை பார்வையிட்டு அங்குள்ள குழந்தைகளுடன் 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதாமாக அவர்களுடன் கேக், இனிப்பு மற்றும் பழங்களை வழங்கியும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டினை கொண்டாடினார்.

மேலும் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %