0 0
Read Time:1 Minute, 38 Second

மயிலாடுதுறை: இன்று முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 21 பொருட்கள் வழங்கும் விழா தொடக்கம்.
தமிழர் திருநாள் தைப்பொங்கல் முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மயிலாடுதுறையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 20 மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சியர் லலிதா பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பூம்புகார் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.

இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பினை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %