0 0
Read Time:1 Minute, 47 Second

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி, காட்டுச்சேரி, நரசிங்கநத்தம், ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுப் பொருட்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் வழங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பொங்கல் சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தில்லையாடி ரங்கராஜன், காட்டுச்சேரி சுவாமிநாதன், திருவிடைகழி ராஜா, ஈச்சங்குடி புஷ்பமேரி உதயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஈச்சங்குடி இளங்கோவன், செயலர்கள் சேகர் தினேஷ் பாபு எழுத்தர் விஜயபாஸ்கர் அரசு அலுவலர்கள், திராவிட முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %