0 0
Read Time:1 Minute, 19 Second

கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் நேற்று சாலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர் காரைக்கால் திருநள்ளாறு மீனவர் காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (39) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் 250 சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவர் கடத்தி வந்த சாராயத்தையும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %