0 0
Read Time:52 Second

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது என குறிப்பிட்டார். மதுரையில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரிக்கு பிரதமர் வருவதும் உறுதியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %