0 0
Read Time:1 Minute, 29 Second

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

பாரத பிரதமருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் சிதம்பரத்தில் நான்கு வீதிகளையும் சுற்றி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் மருதை தலைமையில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இளைஞரணி நகர தலைவர் ரா.முரளி தரன், குமராட்சி ஒன்றிய தலைவர் பூமிபாலன், இவர்களுடன் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுக்குழு உறுப்பினர் தாமரை மணிகண்டன் மற்றும் கேப்டன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர். சிதம்பரம் பாஜக நகர தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார்.

செய்தி: பில்லா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %