0 0
Read Time:1 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமையன்று பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கலை & அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

செம்பனார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர், கல்லூரி தாளாளர் கருணா ஜோசப்பாத், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். செவிலியர்கள் ஜாஸ்மீன் ரூபெல்லா, ரெஜினா ஆகியோர் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர்.

சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தவறாமல் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %