0 0
Read Time:1 Minute, 12 Second

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1710 படித்த ஏழை மகளிர் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர்
கமலஜோதிதேவேந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கினர் சிறப்பித்தனர் இந்நிகழ்வில்அரசு ஊழியர்கள், பயனாளிகள், கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %